• June 6, 2025
  • NewsEditor
  • 0

வாக்களித்த மக்களுக்கு நான்கு நல்ல விஷயங்களைச் செய்துகொடுத்தவர்கள், அந்த நம்பிக்கையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட துணிவார்கள். அப்படியில்லாமல் வாக்களித்த மக்களின் சுக துக்கங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்குபவர்களை மக்களும் சமயம் வரும் போது போட்டுப் பார்த்துவிடுவார்கள். அப்படியொரு அனுபவம் கிடைத்ததாலோ என்னவோ, தொகுதிக்கு வெளியே வசித்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலுக்காக சொந்தத் தொகுதிக்கே வீட்டை மாற்றிக் கொண்டு மக்கள் சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

​பாஜக-வைச் சேர்ந்த நமச்​சி​வா​யம் முதல்​வர் ரங்​க​சாமி​யின் அண்​ணன் மகளை திரு​மணம் செய்​தவர் என்​ப​தால், அவருக்கு மரு​மகன் முறை. 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில் வில்​லிய​னூர் தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாள​ராக போட்​டி​யிட்ட இவர், வெற்​றி​பெற்று அமைச்​சர​வை​யிலும் இடம்​பிடித்​தார். 2016-ல் மீண்​டும் வில்​லிய​னூரில் போட்​டி​யிட்ட இவரை முதல்​வர் வேட்​பாளர் என பிரகடனம் செய்​தது காங்​கிரஸ்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *