
புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிப்போம் என புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் இன்று இணைந்தனர். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்என்ஆர். பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.