• June 6, 2025
  • NewsEditor
  • 0

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுனில் கவாஸ்கர்

கவாஸ்கர் எழுதியிருப்பதாவது, ‘ஐ.பி.எல் இல் அதிக தொகைக்கு ஏலம் போன இளம் வீரர்களை பாருங்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே இந்திய அணிக்காகவும் ஆடி ஜொலித்திருப்பார்கள். அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர்களுக்கு பல கோடிகள் கிடைத்தது. உண்மையில் அவர்கள் அத்தனை கோடிகளுக்கு தகுதியானவர்கள் இல்லை.

உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்களின் போட்டி ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது. அது நல்ல விஷயம்தான். ஆனால், அதிலும் ஒரு வரைமுறை வேண்டும். அதிகமான போட்டிகளில் ஆடுவோருக்கு அதிக ஊதியம் செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

இல்லையேல் நாக் அவுட்டுக்கு செல்லும் அணியின் வீரர்களுக்கு அதிக தொகையை ஊதியமாக கொடுக்க வேண்டும். இதன் வழி காயமடைவதை போல அடைந்து ஓய்வெடுத்து ஐ.பி.எல்க்கு வந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர்களை குறைக்கலாம்.’ என எழுதியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *