
புதுடெல்லி: “தனக்கு முந்தைய அரசுகள் செய்த பணிகளுக்கான பெருமையையும் தானே எடுத்துக்கொள்ள பிரதமர் மோடி விரும்புகிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்த சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சி இவ்வாறு சாடியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது: “இந்த ரயில்வே திட்டத்துக்கான அனுமதி, கடந்த 1995-ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் இதனை தேசிய திட்டமாக அறிவித்தார். உத்தம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா இடையிலான 272 கி.மீ. தூரத்தில், 160 கி.மீ. தூரப்பாதை ஏற்கெனவே 2014-க்கு முன்பே திறக்கப்பட்டுவிட்டது. மோடி வந்து, ஒப்பந்தம் கொடுத்து, வேலைகள் நடந்தது என்பது போல இது நடக்கவில்லை.