
புதுடெல்லி: ‘நீங்கள் என்னை தப்பியோடியவன் என்று கூறலாம்… ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல’ என்று இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
ரூ.9,000 கோடிக்கு மேல் பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். இங்கிலாந்தில் உள்ள அவர், இந்தியாவில் தனக்கு எதிராக இருக்கும் வழக்குகள் குறித்தும், தனது சட்டப் போராட்டங்கள், தனது விமான நிறுவனத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.