
வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரிடம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவரது மகன் இஷான் தரூர் கேள்வி எழுப்பினார். அதற்கான மூன்று காரணங்களை அடுக்கி சசி தரூர் விளக்கமளித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரங்களை தங்கள் குழுவிடம் எந்த நாடும் கேட்டதா என்று இஷான் தரூர், சசி தரூரிடம் கேள்வி எழுப்பினார். அதேபோல இந்த தாக்குதலில் தனக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பது குறித்தும் அவர் வினா எழுப்பினார்.