• June 6, 2025
  • NewsEditor
  • 0

விஜய் மல்லையா – இந்தப் பெயரை இந்தியாவில் எவரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல பிசினஸ்களைச் செய்து வந்த பிசினஸ்மேன் வங்கிகளில் தான் வாங்கிய கடனை அடைக்காமல் வெளிநாட்டிற்கு ஓடியவர் ஆவார். இன்னமும் இந்தியாவில் இவர் மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளன.

சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசியுள்ள விஜய் மல்லையா, தான் கடன் வாங்கிய வங்கிகளைக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் பேசியுள்ளதாவது…

“என்னுடைய கடன் தொகையும், 11.5 சதவிகித வட்டியும் சேர்த்து நான் கட்ட வேண்டிய மொத்தத் தொகை ரூ.6,203 கோடி. ஆனால், வங்கிகள் என் சொத்துகள் மூலம் ரூ.14,000 கோடியைப் பறிமுதல் செய்துள்ளன.

விஜய் மல்லையா

அதுகுறித்த வங்கி ஸ்டேட்மென்ட் கூட என்னிடம் கொடுக்கவில்லை. இதற்காக நான் வழக்கறிஞர் மூலமும் வங்கிகளுக்குக் கடிதம் வழங்கியுள்ளேன். தனிப்பட்ட முறையிலும் கடிதம் வழங்கியுள்ளேன்.

கடைசியாக, இதுகுறித்து பேச மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என்று வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், வங்கிகள் அதை மறுத்துவிட்டன.

அதனால் தான், நான் கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளேன். ஆக, இவற்றால் நான்தான் பாதிக்கப்பட்டு உள்ளேன்”.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *