• June 6, 2025
  • NewsEditor
  • 0

திமுக தொண்டர்களை தேர்தலுக்குத் தயார்படுத்தும் மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் கே.என்.நேருவும் பிரதானமாக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே நேரு கோஷ்டி, அன்பில் மகேஸ் கோஷ்டி என இன்னமும் தாமரை இலை தண்ணீராகவே நிற்கிறார்கள் உடன்பிறப்புகள். அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இது அப்பட்டமாகவே தெரிந்தது.

ஒரு காலத்​தில் திருச்சி மாவட்ட திமுக என்​றால் அது கே.என்​.நேரு​வின் முக​மாக மட்​டுமே இருந்​தது. ஒன்​று​பட்ட திருச்சி மாவட்​டத்​துக்கே செய​லா​ள​ராக இருந்த நேரு, மாவட்ட திமுக-வை தனது கண்​ணசை​வில் வைத்​திருந்​தார். அதன் பிறகு அன்​பில் மகேஸ் அவருக்​குப் போட்​டி​யாக மாவட்ட திமுக-​வில் தலை​தூக்க ஆரம்​பித்​தார். இதனால் நேருவை பிடிக்​காதவர்​கள் எல்​லாம் மகேஸ் பக்​கம் அணிவகுத்​தார்​கள். மகேஸ் தலை​மைக்கு நெருக்​க​மான பிள்​ளை​யாக இருந்​த​தால் அவரது வளர்ச்​சியை நேரு​வால் தடுத்து நிறுத்த முடிய​வில்​லை. அதேசம​யம் கள வீர​ரான நேரு​வை​யும் தலை​மை​யால் ஒதுக்கி வைக்கவும் முடிய​வில்​லை. இதனால் கோஷ்டி பூசல் நாளொரு மேனியாய் வளர ஆரம்​பித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *