
புதுடெல்லி: தீவிரவாத சதி தொடர்பான வழக்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தீவிரவாத சதி திட்டம் தொடர்பாக பல்வேறு தீவிரவாத அமைப்புகள், அவற்றுக்கு உதவி செய்தவர்கள் மீது ஜம்முவில் கடந்த 2022-ல் என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.