
சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை தரமணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில், ஏழை மக்களை பாதிக்கும் வகையில் அத்திவாசிய பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிரணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் முன்னிலையில் சென்னை தரமணியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: