• June 6, 2025
  • NewsEditor
  • 0

குப்பம்: சித்​தூர் மாவட்​டம், குப்​பம் அருகே உள்ள வி.கோட்டா மாட்​லபல்லி கிராமத்தை சேர்ந்த குஷால், நிகில், ஜெகன் ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்​தனர். இவர்​கள் தின​மும் மாட்​ல பல்லி ஏரி​யில் நீச்​சல் பழகி வந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இவர்​கள் வழக்​கம் போல் நீச்​சல் பழக நேற்று அதே ஏரிக்கு சென்​றனர். அப்​போது இதில் ஒரு மாணவர் நீரில் மூழ்​கு​வதை பார்த்து மற்ற இரு​வரும் அந்த மாணவரை காப்​பாற்ற சென்​றனர். ஆனால், 3 பேரும் பரி​தாப​மாக நீரில் மூழ்​கினர். இதனை அங்​கிருந்​தவர்​கள் பார்த்து உடனடி​யாக 3 பேரை​யும் காப்​பாற்ற முயன்​றனர். அதற்​குள் 2 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். 3-வது சிறு​வன் காப்​பாற்​றப்​பட்​டு, மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் உயி​ரிழந்​தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *