• June 6, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: ஐபிஎல் போட்​டி​யில் ஆர்​சிபி அணி​யின் வெற்​றியை கொண்​டாடும் வகை​யில் பெங்​களூரு​வில் நடந்த விழா​வில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. போதிய பாது​காப்பு ஏற்​பாடு​களை மேற்​கொள்​ளாமல் அவசர கதி​யில் விழாவை நடத்​தி​யது ஏன் என்று கர்​நாடக உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. இதுதொடர்​பாக கர்​நாடக அரசு, பெங்​களூரு காவல் ஆணை​யர், ஆட்​சி​யர், ஐபிஎல், பிசிசிஐ நிர்​வாகி​கள் பதில் அளிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

ஐபிஎல் கிரிக்​கெட் தொடரில் இறுதி போட்​டி​யில் வென்ற ஆர்​சிபி (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு) அணிக்கு பெங்​களூரு​வில் நேற்று முன்​தினம் விதானசவுதா வளாகத்​தி​லும், சின்​ன​சாமி கிரிக்​கெட் ஸ்டேடி​யத்​தி​லும் வெற்றி விழா நடை​பெற்​றது. சின்​ன​சாமி ஸ்டேடி​யத்​தில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் காமாட்சி உட்பட 11 ரசிகர்கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *