• June 6, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் வரும் ஜூன் 22-ம் தேதி பாஜக சார்பில் முருகன் மாநாடு நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உள்பட அனைத்து முருகன் கோயில்களையும் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தலை முன்வைக்க உள்ளனர்.

இந்த மாநாட்டிற்கு ‘குன்றம் காக்க… கோயிலைக் காக்க…’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த மாநாடு குறித்து தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்கப்பட்டது.

சேகர்பாபு

அதற்கு அவர், “மதுரையில் நடப்பது முருகன் மாநாடு அல்ல. சங்கிகளின் மாநாடு. மக்களைப் பிளவுபடுத்தக் கூடிய ஆயுதமாக முருகன் மாநாட்டை சங்கிகள் நடத்துகின்றனர்” என்று பதில் அளித்துள்ளார்.

நாளை மறுநாள் (ஜூன் 8) மதுரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர இருக்கிறார்.

மேலும், இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு அழைப்பினராகக் கலந்துகொள்ள உள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *