
சென்னை: தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் குப்பைகள் சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூய்மைத் தமிழ்நாடு சார்பில், பல்வேறு வகையான கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணி குறித்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.