• June 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை: தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலை​யம் இருக்​கிறது. இந்த ரயில் நிலை​யத்தை உலகத் தரத்​துக்கு மேம்​படுத்த தெற்கு ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்​தது. அதன்​படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடி​யில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்​கியது. முதலில் அடித்​தளம் அமைக்​கும் பணி முடிந்​தது.

இதையடுத்​து, காந்தி இர்​வின் சாலை பக்​கத்​தில் எழும்​பூர் ரயில் நிலை​யத்தை ஒட்டி பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைக்​கும் பணி​ முழு​வீச்​சில் நடை​பெறுகிறது. இதற்​கிடை​யில், ரயில் நிலை​யத்​தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை அனைத்​தை​யும் இணைக்​கும் வித​மாக, நடைமேம்​பாலம் அமைப்​ப​தற்​கான ஆரம்​ப பணி​ தொடங்​கி​யுள்​ளது. இதற்​காக, ரயில் நிலையத்​தின் முதல், 2-வது நடைமேடைகள் நேற்று முதல் மூடப்​பட்​டுள்​ளன. அடுத்த 15 நாட்​களுக்கு பிறகு 3, 4 வது நடைமேடைகளை மூட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *