
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) இரண்டு அணிகளும் இணைவது குறித்து எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை என்று என்சிபி (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே கூறினார்.
சரத் பவார் மற்றும் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையில் இயங்கி வரும் என்சிபி-யின் இரு அணிகளும் இணையவிருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளது. சமீப காலத்தில் சரத் பவாரை அஜித் பவார் பலமுறை சந்தித்து பேசியதால் இணைப்பு குறித்த பேச்சு எழுந்தது.