
சென்னை: பொதுமக்கள் கருத்து கேட்புக்கு பின் கு எரிஉலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை, வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
டோக்கியோவில் 19 ஆலைகள் உட்பட உலகில் 2800-ம் மேற்பட்ட ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. பாரீஸில் ஈபிள் கோபுரத்தின் அருகில் செயல்படுகிறது. கொடுங்கையூரில் எரிஉலை அமைக்கும் திட்ட பணிகள், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின் மேற்கொள்ளப்படும்” என கூறப்பட்டுள்ளது.