
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்று பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார்.
எதற்காக?
ஜம்மு & காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலம் ‘செனாப் பாலம்’ மற்றும் இந்தியாவின் முதல் கேபிள் தாங்கிய ரயில் பாலம் ‘அஞ்சி பாலத்தை’ இன்று திறந்து வைக்கிறார்.
செனாப் பாலத்தின் சிறப்பம்சம் என்ன?
இது உலகின் மிகப்பெரிய ரயில்வே வளைவு பாலம் ஆகும். இது உதம்பூர் – ஸ்ரீநகர் – பர்முல்லா இணைக்கும் ரயில்வே திட்டம் ஆகும்.
செனாப் பாலம் கடல்மட்டத்தில் இருந்து 359 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது ஈபிள் கோபுரம் மற்றும் குதுப் மினாரை விட உயரமாகும்.
இந்தப் பாலத்தின் நீளம் 1.3 கிலோ மீட்டர் ஆகும். சென்ப் பாலம் மிகவும் வலுவான ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டது ஆகும். இது -10 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி நிற்கும். இதில் டிசைனிங் மற்றும் பாலத்தின் கட்டமைப்பில் ‘டெக்லா’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இந்தப் பாலத்தில் ரயில்கள் ஒருமணி நேரத்திற்கு100 கி.மீ வேகத்தில் ஓடலாம். இந்தப் பாலத்தின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள் ஆகும்.
இந்தப் பாலத்தின் மதிப்பு ரூ.1,486 கோடி ஆகும். செனாப் பாலத்தை நிலநடுக்கத்தால், தாக்குதல்களாலும் தகர்க்க முடியாது. இந்தப் பாலத்தில் வந்தே பாரத் ரயில்கள் ஓட உள்ளது.
அஞ்சி பாலம்
இது கடல்மட்டத்தில் இருந்து 331 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்தப் பாலத்தின் நீளம் 725 மீட்டர் ஆகும். இது 96 கேபிள்களால் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க சென்சார்கள் இந்தப் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் ரயில்கள் ஒருமணி நேரத்திற்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்தப் பாலம் ஒருமணி நேரத்திற்கு 213 கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கும் காற்றைக் கூட தாங்கி நிற்க முடியும்.
இமலாய மலையின் உச்சியில், இந்த இரு அதி நவீன ரயில்வே பாலங்களையும் அமைப்பது அவ்வளவு எளிதல்ல. அது தான் இந்த இரு பாலங்களையும் இன்னும் ஸ்பெஷல் ஆக்குகிறது.