• June 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயி​லில் பிராண பிர​திஷ்டை பிர​சாதம் எனக் கூறி 6 லட்​சம் பேரிடம் மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்​தி​யில் ராமர் கோயில் பிராண பிர​திஷ்டை செய்த பிறகு சுவாமி பிர​சாதம் கிடைக்​க​வில்லை என அயோத்தி காவல் நிலை​யங்​களுக்கு புகார்​கள் வரத் தொடங்​கின. அந்த புகார்​கள் மாநில சைபர் கிரைம் பிரி​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. சைபர் கிரைம் பிரிவு நடத்​திய விசா​ரணை​யில், போலி இணை​யதளம் உரு​வாக்​கி, ராமர் கோயில் பிர​சாதம் அனுப்​புவ​தாக விளம்​பரப்​படுத்​தப்​பட்​டது தெரியவந்​தது.

காஜி​யா​பாத்தை சேர்ந்த ஆசிஷ் என்​பவர் இந்த மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளார். ராமர் கோயில் பிர​சாதம் பெற இந்​தி​யா​வில் ரூ.51 எனவும், வெளி​நாட்​ட​வர்​களுக்கு 11 டாலர் எனவும் கட்​ட​ணம் நிர்​ண​யித்​துள்​ளார். அந்​தவகை​யில், 3 கோடியே 85 லட்​சம் ரூபாயை, 6 லட்​சத்து 30,695 பக்​தர்​களிடம் ஏமாற்றி வசூல் செய்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *