• June 6, 2025
  • NewsEditor
  • 0

அயோத்தி: அயோத்தி ராமர் கோயி​லில் குழந்தை ராமர் சிலை​யின் பிராண பிர​திஷ்டை நிகழ்ச்சி கடந்​தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்​னிலை​யில் நடை​பெற்​றது. ராமர் கோயில் வளாகத்​தில் மற்ற சன்னதி​களின் கட்​டு​மானம் தொடர்ந்து நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பணி​கள் நிறைவடைந்​த​தால், புதி​தாக கட்​டப்​பட்ட சன்னதிகளில் சுவாமி சிலைகள் பிர​திஷ்டை செய்​யும் நிகழ்ச்சி நேற்று காலை அபிஜித் முகூர்த்​தத்​தில் நடை​பெற்​றது. இதற்​கான யாக பூஜைகள் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்​கின.

அதன்​பின் அனைத்து சன்னதி களி​லும் சுவாமி சிலைகள் பிர​திஷ்டை செய்​யப்​பட்​டன. ​ராம் தர்​பார், ஷேசாவ​தார், சிவன், விநாயகர், அனு​மன், சூர்​யா, பகவ​தி, அன்​னபூர்ணா ஆகிய சிலைகள் அந்​தந்த சன்னதி​களில் பிர​திஷ்டை செய்​யப்​பட்​டன. ராமர் கோயி​லின் முதல் தளத்​தில் உள்ள ராம் தர்​பாரில் உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் வழி​பாடு நடத்​தி​னார். அதன்​பின் அரு​கில் உள்ள அனு​மன்​கர்கி கோயி​லில் வழிபட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *