• June 6, 2025
  • NewsEditor
  • 0

திருப்பதி: திருப்​பதி ஏழு​மலை​யானை அலிபிரி அல்​லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்​க​மாக மலை​யேறி செல்​லும் பக்​தர்​களுக்கு பாதி வழி​யில் திவ்ய தரிசன டோக்​கன்​ வழங்​கப்​பட்டு வந்​தது. மேலும் ஒரு லட்டு பிர​சாத​மும் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​தது. இதனை ஜெகன் ஆட்​சி​யில் ரத்து செய்​தனர்.

தற்​போது சந்​திர​பாபு நாயுடு மீண்​டும் முதல்​வ​ரானதும், திவ்ய தரிசன டோக்​கன்​கள் வழங்​கப்பட வேண்​டும் என பக்​தர்​கள் கோரிக்கை விடுத்​தனர். அதன்​படி, இன்று ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணி முதல் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்​ளக்​ஸில் திவ்ய தரிசனத்​திற்​கான டோக்​கன்​கள் வழங்​கும் திட்​டம் மீண்​டும் தொடங்​கப்பட உள்​ளது. இதற்​காக 10 விநி​யோக கவுன்​டர்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 6 திவ்ய தரிசன டோக்​கன்​களுக்​காக​வும், மீத​முள்ள 4 கவுன்​டர்​கள் இலவச தரிசன டோக்​கன்​கள் வழங்​கும் மையங்​கள் எனவும் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *