• June 6, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்களை அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்றுமாறு உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *