
ஜம்மு: செனாப் ரயில் பாலத்தை தொடங்கி வைக்கவும், காஷ்மீரின் கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பிரதமர் மோடி முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்வதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்த்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.