
சென்னை: மத்திய அரசின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு, குழப்பத்தை ஏற்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் அன்புமணி: தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே குழப்பத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.