• June 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாநிலங்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் திமுக, அதி​முக வேட்​பாளர்​கள் நாளை (ஜூன் 6-ம் தேதி) வேட்பு மனுக்​களை தாக்​கல் செய்​கின்​றனர். தமிழகத்​தில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட வைகோ, பி.​வில்​சன், சண்​முகம், முகமது அப்​துல்​லா, அன்​புமணி மற்​றும் சந்​திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்​காலம் வரும் ஜூலை 27-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. இதையடுத்​து, காலி​யாக உள்ள 6 இடங்​களுக்​கான தேர்​தலை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

இந்த இடங்​களுக்​கான வேட்பு மனுத்​தாக்​கலுக்​காக, தமிழக சட்​டப்​பேரவை செயலக கூடு​தல் செயலர் சுப்​பிரமணி​யன் தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யாக​வும், பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் உதவி தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வை​யில், எம்​எல்​ஏக்​கள் பலம் அடிப்​படை​யில் 6 இடங்​களில் 4 திமுக​வுக்​கும், இரண்டு அதி​முக​வுக்​கும் கிடைக்​கும். அதன் அடிப்​படை​யில், திமுக சார்​பில் 4 இடங்​களுக்கு மக்​கள் நீதி மய்​யம் கட்​சித்தலை​வர் கமல்​ஹாசன், பி.​வில்​சன், கவிஞர் சல்​மா, சிவலிங்​கம் ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *