
சென்னை: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தினால் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்படும் என்பதால் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவர்களின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என கடந்தாண்டு செப்.8-ல் நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.