
கடலூர்: “பாமகவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணையாது. அந்தப் பேச்சுக்கே வாய்ப்பில்லை” என கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று (ஜூன்.5) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் எனது சகோதரர் திருமால்வளவன் நேரில் சந்தித்தார். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்தது. ஆனால், இந்தச் சந்திப்புக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் எனது குடும்பமும், எனது சகோதரர்களும் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சிக்காக நாங்கள் உழைத்தோம்.