• June 5, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினத்தில் உள்ள நம்பியார் நகர் கிராமம், மீனவ கிராமங்களுக்குத் தலைக்கிராமமாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீ புதிய ஒளி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

63 நாயன்மார்களின் ஒருவரான அதிபத்த நாயானாருக்குப் புதிய கற்கோயில் அமைக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற இக்கோயில்களின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்ற குடமுழுக்கு மதங்களைக் கடந்து மனித நேயத்திற்கு எடுத்துக் காட்டாக நடந்திருக்கிறது.

சீர் வரிசை எடுக்கும் இஸ்லாமியர்கள்

அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் 21 தாம்பூலத் தட்டுகளில் சீர் வரிசை எடுத்துச் சென்றனர். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டான இந்த சம்பவம் நாகை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தொழிலதிபர் மீரா உசைன் கூறுகையில், “வேதாரண்யம் தொடங்கி கடலூர் வரை உள்ள மீனவ கிராமங்களுக்கு நம்பியார் நகர் கிராமம் தலைக்கிராமமாக இருந்து வருகிறது.

இப்பகுதியில் மும்மதத்தினரும் வசிக்கிறோம். மதங்கள் கடந்து, மனித நேயத்துடன், சகோதரத்துவத்துடன் ஒவ்வொரும் தாயா, பிள்ளையா பழகுறோம்.

எங்க பகுதியில் நடக்கும் விழாக்களில் மதங்கள் கடந்த அன்பை வெளிப்படுத்தி ஒன்றாகக் கலந்திருப்போம். காலங்காலமாக எங்களுக்குள்ளான இந்த அன்பு தொடர்கிறது.

இந்த நிலையில், இன்று காலை, ஸ்ரீ புதிய ஒளி மாரியம்மன், அதிபத்த நாயானார் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதற்கு முறைப்படி எங்களுக்கு அழைப்பு கொடுத்திருந்த நிலையில், சாமிக்குத் தேவையான பூஜைப் பொருட்கள், உடை, இனிப்பு, பூ, பழங்கள் என மொத்தம் 21 தாம்பூலத் தட்டுகளில் குடமுழுக்கிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சீர்வரிசையாக எடுத்துச் சென்றோம்.

இஸ்லாமியர்

ஏழை பிள்ளையார் கோயிலிலிருந்து குடமுழுக்கு நடைபெற்ற கோயிலுக்குச் சீர் வரிசை எடுத்துச் சென்றோம். இதையறிந்த பலரும் இது மத நல்லிணக்கத்து எடுத்துக் காட்டு என நெகிழ்ந்து பாராட்டினர்.

விழா கமிட்டி, எங்களுக்குச் சிறப்பு மரியாதை செய்து வரவேற்றனர். கோயிலுக்குள் செல்பி எடுத்துக் கொண்டோம். சீர் வரிசையுடன் சென்ற நாங்கள் குடமுழுக்கு முடிந்த பிறகுதான் அங்கிருந்து கிளம்பினோம்.

நாகூர் தர்ஹா, வேளாங்கண்ணி சர்ச், சிக்கல் சிங்கராவேலர் கோயில் என மும்மதத்தின் அடையாளமான சிறப்புமிக்க தளங்கள் அமைந்திருப்பதால் நாகப்பட்டினம் இயற்கையிலேயே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டான மாவட்டமாக இருந்து வருகிறது.

சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் நடக்கும் விழாக்களுக்கு நாங்களும், வேளாங்கண்ணி சர்ச் விழாவில் நாகூர் தர்கா டிரஸ்டிகளும், நாகூரில் நடக்கும் விழாக்களுக்கு வேளாங்கண்ணி சர்ச் பாதரும் கலந்து கொண்டு சிறப்பித்து அன்பை வெளிப்படுத்துவர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு இங்குப் பல காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கோயிலில் இஸ்லாமியர்கள்
கோயிலில் இஸ்லாமியர்கள்

இதேபோல்தான் மத வேறுபாடின்றி ஒரே குடும்பமாக வாழ்ந்து வரும் நாங்கள் எங்கள் சகோதரர்களின் கோயிலுக்கு சீர்வரிசை எடுத்துச் சென்றோம்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது பெரிதாகத் தெரியும். ஆனால் நாங்கள் இதே போல் எப்பவும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு தான் எங்களை இணைத்து இதை நிகழ்த்தியிருக்கிறது என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *