
குவஹாத்தி: அசாமில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதாகவும், 21 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ள பாதிப்பு தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹைலகண்டி, திப்ருகார், மோரிகான், ஹோஜாய், கம்ரூப், நாகோன், கோலாகாட், பிவநாத், கச்சார், ஸ்ரீபூமி, சோனித்பூர், லக்கிம்பூர், தர்ராங், பார்பேட்டா, கோல்பாரா, தெற்கு சல்மாரா, கர்பி அங்லாங் மேற்கு, திமா ஹசாவ், சிவசாகர், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் தேமாஜி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.