• June 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “பிரமாண்டமான நிகழ்வுகளை விட, அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் வேலை செய்யும் பொருளாதாரம் வேண்டும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் மொபைல் போன்களின் விற்பனையில் சரிவைக் காட்டும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புள்ளிவிவரங்கள் உண்மையைச் சொல்கின்றன. கடந்த ஆண்டில் இரு சக்கர வாகன விற்பனை 17% ஆகவும், கார் விற்பனை 8.6% ஆகவும் குறைந்துள்ளது. மொபைல் சந்தை 7% ஆக குறைந்துள்ளது. மறுபுறம், செலவுகள் மற்றும் கடன் இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, உள்நாட்டு பணவீக்கம், கல்விச் செலவுகள் உட்பட கிட்டத்தட்ட எல்லாமே விலை உயர்ந்து வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *