
லக்னோ: ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பட்டியலினத்தவர் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரிடையே உள்ள சந்தர்ப்பவாத நபர்களை பயன்படுத்தி புதிய கட்சிகளை உருவாக்கி தங்கள் கட்சிக்கு எதிராக சதி செய்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மாயாவதி, "அதிகாரத்தில் உள்ள சாதிவெறிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் பட்டியலினத்தவர் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரிடையே உள்ள சில சந்தர்ப்பவாத மற்றும் சுயநல நபர்கள் மூலம் திரைக்குப் பின்னால் புதிய கட்சிகளை உருவாக்கியுள்ளன. இந்தக் கட்சிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிஎஸ்பி கோட்டையாக உள்ள பிற மாநிலங்களிலும், தலித்துகள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரை தவறாக வழிநடத்தி, அவர்களின் வாக்குகளைப் பிரிக்க அனைத்து வகையான தந்திரங்களையும் பயன்படுத்துகின்றன" என்று கூறினார்.