• June 5, 2025
  • NewsEditor
  • 0

இன்று காலை முதலே பாமக கட்சியின் காட்சிகள் பரபரப்போடு நகர்ந்துகொண்டிருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக முட்டி மோதிக்கொண்டிருந்த தந்தை -மகனின் சந்திப்பு இன்று நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க அன்புமணி தைலாபுரத்திற்கு சென்றிருந்தார். சுமார் 45 நிமிடங்களுக்கு பின், அன்புமணி வெளியே வந்தார்.

அன்புமணி – ராமதாஸ் – பாமக

சந்திப்பிற்கு பிறகு, எதுவும் பேசாமல் அன்புமணி கிளம்பி சென்றுவிட்டார். செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்ப முயன்றும், கார் கண்ணாடியை கூட இறக்காமல், ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இவருக்கு அடுத்து, தைலாபுரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமியும் ராமதாஸை சந்தித்தனர். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நீண்டது.

சைதை துரைசாமி - ஆடிட்டர் குருமூர்த்தி
சைதை துரைசாமி – ஆடிட்டர் குருமூர்த்தி

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியின் அன்புமணியின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘எனக்கு அன்புமணி இங்கே வந்ததே தெரியாது. பாஜகவிற்காக நான் இங்கு வரவில்லை. ராமதாஸ் என்னுடைய நிண்ட நாள் நண்பர் அவரை சந்தித்து பேசவே இங்கு நான் வந்தேன்.

பிரச்னை இருக்கும் இடத்கிற்கு நான் செல்லவில்லை நான் இருக்கும் இடத்திற்கு தான் பிரச்னை தேடி வருகிறது” என்று கூறினார்.

ராமதாஸ் இல்லத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி
ராமதாஸ் இல்லத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி

அன்புமணி-ராமதாஸ் சந்திப்பு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேட்கப்பட்டப்போது, `அன்புமணி இன்று இங்கே வந்தாராமே’ என்று சைதை துரைசாமியிடம் கேட்ட சம்பவமும் நடந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *