
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்படி நேற்று, உலகில் உள்ள குறிப்பிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.
காரணம் என்ன?
இதுகுறித்து கூறப்படும் வெள்ளை மாளிகையின் அறிக்கையில் கூறப்படுவதாவது,
“மக்களின் பின்புலத்தைச் சரியாக ஆராய முடியாத, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள நாடுகளைச் சேர்ந்த மக்களை அமெரிக்காவிற்குள் வர அனுமதிக்க முடியாது”.
அந்த 12 நாடுகள் என்னென்ன?
ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், எரித்திரியா, ஹைட்டி, ஈரான், சோமாலியா, சூடான், ஏமன், காங்கோ குடியரசு, ஈக்விட்டோரியா கினியா, லிபியா ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.
7 நாடுகள்!
இன்னும் 7 நாடுகளின் மக்கள் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, பகுதியாக அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த நாடுகள்… புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா.
பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் தீவிரவாதம் மற்றும் போதைப் பொருட்களைக் கடத்துகிறார்கள். இதனால், அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது ட்ரம்பின் குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டின் ஒரு பகுதியாகத் தான் ஆவணம் செய்யப்படாத வெளிநாட்டு மக்களை ட்ரம்ப் வெளியேற்றி வருகிறார்.
தற்போது, அடுத்ததாக, சில நாட்டு மக்களை அமெரிக்காவிற்குள் உள்நுழைவதைத் தடுக்கிறார் ட்ரம்ப்.
"We cannot have open migration from any country where we cannot safely and reliably vet and screen… That is why today I am signing a new executive order placing travel restrictions on countries including Yemen, Somalia, Haiti, Libya, and numerous others." –President Trump pic.twitter.com/ER7nGM4TO2
— The White House (@WhiteHouse) June 4, 2025