
புதுடெல்லி: வெறுப்புப் பேச்சு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால், உத்தரப் பிரதேச எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றவாளியாக இருந்து அரசியலுக்கு வந்த முக்தார் அன்சாரியின் மகன் ஆவார். இவருக்கு ஜாமீன் கிடைத்தும் அதன் பலன் கிடைக்கவில்லை.
உத்தரப் பிரதேசத்தின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) சார்பில் மாவ் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அப்பாஸ் அன்சாரி. குற்றவாளிகள் பட்டியலில் இருந்த இவர் அரசியல்வாதியாக மாறினார்.