
புதுடெல்லி: ‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கடந்த மாதம் 7-ம் தேதி இரவு நடைபெற்றபோது, அதை பிரதமர் மோடி கண்காணித்தார்’’ என பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை கேள்வி பட்டதும் தனது வெளிநாட்டு பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி. முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும், சுதந்திரத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். இதற்கு முன் இதுபோல் நடைபெற்றதில்லை.