
கொச்சி: மலையாள நடிகர்கள் மீது நடிகைகள், துணை நடிகைகள் கூறிய பாலியல் புகார்கள் விவகாரத்தில் விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி தந்த அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்த 34 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இது மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தர சாட்சிகள் தயங்குவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது; அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று மலையாள திரையுலகிலிருந்து சில நடிகைகள் கோரிக்கையை முன் வைத்தனர். அதையேற்ற கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தார்.