
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடுமையான பதிலடியை தந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 விமானங்கள் அழிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மே மாத தொடக்கத்தில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய பிறகு பாகிஸ்தானின் வான்வழி மற்றும் தரைவழி ராணுவ சொத்துகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. வான்வழி தாக்குதல் நடவடிக்கைகளின்போது பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான 6 விமானங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. மேலும், இரண்டு உயர்திறன் கண்காணிப்பு விமானங்கள் அழிக்கப்பட்டன. ட்ரோன் மூலம் குறிப்பிட்ட இலக்கை தாத்குவதன் மூலம் சி-130 ஹெர்குலில் போக்குவரத்து விமானம் அழிக்கப்பட்டது.