
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 30 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு 3 மாத காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.