
புதுடெல்லி: நாடு முழுவதும் 2026 அக்டோபர் 1, 2027 மார்ச் 1 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், கரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து, இப்பணி தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மீண்டும் தள்ளிப்போனது.