
இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அடுத்ததாக கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய 2021-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தினால் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் போனாது.
இதனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2027 இப்போது எடுக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பும் மக்கள்தொகை கணக்கெடுப்போடு எடுக்கப்பட உள்ளது.
எப்போது தொடங்கப்படுகிறது?
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2027 இரு கட்டங்களாக நடக்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் 16-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தரவுகள் எப்படி எடுக்கப்படும்?
பெரும்பாலான இந்திய மாநிலங்களுக்கு 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி நடு இரவு அடிப்படை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லடாக், ஜம்மு & காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பனி சூழந்த பகுதிகளுக்கு 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி அடிப்படை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதிகளின் தட்ப வெட்பம் தான் முக்கிய காரணம்.
அடிப்படை நாள் என்றால் என்ன?
பெரும்பாலான இந்திய மாநிலங்களுக்கு, மார்ச் 1, 2027 அடிப்படை நாள் மார்ச் 1-ம் தேதி என்றால், அந்த நாளின் நடு இரவுக்கு பிறகு, பிறக்கும் குழந்தைகள் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படமாட்டார்கள்.
பிப்ரவரி 28, 2027-ம் ஆண்டு அன்று இறப்பவர்களின் பெயர் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட மாட்டாது.
மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு, வீடு மாறினால், அவர்கள் முன்னர் குடியிருந்த வீட்டு முகவரி தான் அவருடைய வீட்டு முகவரியாக பதிவாகும்.
Population Census-2027 to be conducted in two phases along with enumeration of castes
Read here: https://t.co/5Nt4QOPqda@HMOIndia @PIB_India pic.twitter.com/avUqB878d2
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) June 4, 2025
மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும்?
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948-ன் படியும், மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிமுறைகள், 1990-ன் படியும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
கடந்த 2011-ம் ஆண்டும், இரு கட்டங்களாகத் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் கட்டமாக, வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன, அடுத்தக் கட்டமாக, மக்கள்தொகை கணக்கிடப்பட்டது. அதே நடைமுறை தான் இப்போதும் பின்பற்றப்பட உள்ளது.