• June 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ர​யில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் முழு​வதும் விற்றுத் தீர்​வதன் பின்​னணி​யில் உள்ள மோசடியை ரயில்வே கண்​டு​பிடித்​துள்​ளது. நாடு முழு​வதும் ரயில்​களில் பயணம் செய்​வதற்​கு, ஐஆர்​சிடிசி இணை​யதளத்​தின் மூலம் பயணி​கள் டிக்​கெட் முன்​ப​திவு செய்​கின்​றனர்.

எனினும், ஒவ்​வொரு ரயிலுக்​கும் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் மொத்த டிக்​கெட்​டு​களும் விற்​று​விடு​கின்​றன. இதனால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு வந்​தனர். குறிப்​பாக பண்​டிகைகள், விடு​முறை நாட்​களில் பயணம் செய்​வதற்​கான டிக்​கெட்​டு​கள் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் தீர்ந்​து​விடும். இத்​தனைக்​கும் பண்​டிகைக்​காக 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு தொடங்​கும். அப்​போதும் கூட டிக்​கெட்​டு​கள் மளமளவென விற்று விடும். இதுகுறித்து நிறைய புகார்​கள் ரயில்​வேக்கு வந்த வண்​ணம் இருந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *