• June 5, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள விஜயாபுரா அருகே கனரா வங்கியில் ரூ.53 கோடி மதிப்பிலான 59 கிலோ தங்க நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விஜயாபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமன் நிம்பர்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜயாபுரா மாவட்டத்தில் உள்ள மனகுலியில் இயங்கிவந்த கனரா வங்கியில் கடந்த மே 25-ம் தேதி இரவு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடிப்பதற்கு முன்பாக மாந்திரீக பூஜை செய்துள்ளனர். பின்னர் லாக்கர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை மட்டும் கள்ள சாவி கொண்டு திறந்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *