
ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் சூறைக் காற்றால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மணல் பரவிக் கிடப்பதால், அரிச்சல்முனைக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
தென்மேற்குப் பருவக் காற்று தொடங்கியதால் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய கடரோரப் பகுதிகளில் புழுதி மணல் காற்று வீசி வருகிறது.