
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ( ஜூன் 4-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பகுதியில் நிரந்தர ரயில்வே வழிப்பிரிவுகளில் 26 ரயில்வே கேட்கள் உள்ளன. அதில் பணி செய்யும் கேட் பாதுகாவலர்கள் வாரத்துக்கு 72 மணி நேரம் பணி செய்யும் நிலை உள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து பிரிவில் (ரயில் நிலையத்துக்கு 1 கி.மீ அருகில் உள்ள ரயில்வே கேட்) பணி செய்பவர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே பணி செய்கின்றனர்.