
மதுரை: திண்டுக்கல் அருகே டாஸ்மாக் மதுபான கடையை 2 வாரத்தில் அகற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தமிழகத்தில மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மதுவிலக்கை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே அமைந்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.