• June 4, 2025
  • NewsEditor
  • 0

ராய்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் 100 கி.மீ. வேகத்தில் சென்ற சொகுசு காரிலிருந்து எச்சில் உமிழ்வதற்காக ஓட்டுநர் கதவைத் திறந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

திங்கள்கிழமை நடந்த இந்த விபத்தில் கார் பலமுறை சாலையில் உருண்டு மேலும் இரண்டு வாகனங்களில் மோதியுள்ளது. போலீஸாரின் கூற்றுப்படி, விபத்தில் உயிரிழந்தவர் ஜாக்கி கெஹி (31). பிலாஸ்பூரின் புறநகரான சக்கர்பாதாவைச் சேர்ந்த துணி வியாபாரி ஆவார். இவர் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். விருந்து முடிந்ததும், தனது நண்பர் ஆகாஷ் சந்தானியைக்கு பேசி தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். ஆகாஷ் அவரது நண்பர் பங்கஜ் சாப்ராவை அழைத்துக்கு கொண்டு இன்னோவா கார் ஒன்றில் ஜாக்கியை கூப்பிடச் சென்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *