
புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் மாதம் தொடங்கும் என்றும், இரண்டு கட்டங்களாக அது நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 1 ஆக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 1 ஆக இருக்கும்.