
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
வரலாறு அறிந்த எந்த இந்தியருக்கும் ஜாலியன் வாலாபாக் என்றாலே ஒரு நிமிடம் உடல் அதிர்ந்து அடங்கும்.
1919 ஏப்ரல் 13 ஆம் தேதி பைசாகி பண்டிகையைக் கொண்டாடக் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதன் பேரில் நடந்த பேரழிவின் நிகழ்வை இக்கால மக்களுக்கு எக்காலமும் எடுத்துரைக்கும் வரலாற்று வடுவின் பதிவுகளை காண நீண்ட நாட்களாக காத்திருந்தோம்.
அண்மையில் மேற்கொண்ட சுற்றுலா திட்டத்தில் ஜாலியன் வாலாபாக் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்ததில் இருந்தே ஆர்வமாக இருந்தோம் .
அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நுழைந்தவுடன் , சீக்கிய குருக்களில் மிக முக்கியமான தலைவரான ரஞ்சித் சிங் மகாராஜாவின் பிரமாண்டமான சிலை நம்மை வரவேற்கிறது.
தெருக்கள் மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டு மிகவும் அழகாகவும் அகலமாகவும் இருக்கிறது. கூடுதல் சிறப்பாக இங்குள்ள கடைகளின் பெயர்பலகைகள் அனைத்துமே ஒரே நிறத்தில் , ஒரே அளவில் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
மெதுவாக கடந்து செல்கையில் , நம்மை வரவேற்பதை போன்று புறாக்கூட்டம் சிறகடித்து பறப்பதும் அமர்வதுமாக இருந்தது. புறாக்களுக்கு தானியங்களை வாங்கி உணவாக அளித்துவிட்டு நகர்ந்தோம் .
ஜாலியன் வாலாபாக் சதுக்கத்திற்கு வெளியே வெள்ளை பளிங்குக் கல்லால் செதுக்கப்பட்ட வெவ்வேறு முகங்கள் கொண்ட ஒரு சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது அதன் அடிப்பகுதியில், படுகொலையில் உயிர் இழந்த “தியாகிகளின்” பெயர்கள் தங்கத்தால் எழுதப்பட்டுள்ளன.
ஜாலியன் வாலாபாக் பூங்காவிற்குள் நுழையும் வழி மிகவும் குறுகலாக இருக்கிறது . விசாரித்ததில் ஜெனரல் டையரும் அவரது படைகளும் இந்த வழியைத்தான் அந்த கொடூர நிகழ்விற்கு பயன்படுத்தியதாக குறிப்புகள் சொல்கின்றன. அந்த குறுகிய பாதையின் இரண்டு பக்கங்களிலும் கொல்லப்பட்ட மனிதர்களின் நினைவாக ஏராளமான விதவிதமான சிற்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

உள்ளே நுழைந்தவுடன் இடது புறத்திலிருந்து ஆரம்பித்து நான்கு அரங்குகளாக சுதந்திர போராட்ட வரலாறும் , ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவங்கள் , காட்சிகளாகவும் சிற்பங்களாகவும், சில இடங்களில் ஒளி ,ஓலியுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .
வரலாற்று பின்னணிகள் அங்கங்கே தகவல்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி அறைகளில் புகைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் கலைஞர்களின் துயர நிகழ்வின் விளக்கக்காட்சிகள் ,படுகொலைக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட சில பாதுகாக்கப்பட்ட நினைவுப் பொருட்கள் ஆகியவை பார்வையாளர்களுக்காக காட்சி படுத்தப்பட்டுள்ளது.

அந்த கொடிய தினத்தில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க நினைத்து ஓடி பலர் குதித்த கிணறு சுற்று சுவர் எழுப்பப்பட்டு கண்ணாடி வழியாக பார்க்கும் வகையில் இருக்கிறது. இந்த கிணற்றில் இருந்து மட்டும் சுமார் 120 உடல்கள் மீட்கப்பட்டதாக சொல்லும் வரலாறு நம்மில் ஒரு அதிர்வு ஏற்பட்டு அடங்குகிறது.
இப் பூங்காவில் உள்ள சிவப்பு செங்கல் சுவரில் வன்முறையின் அடையாளமாக தோட்டாக்கள் பாய்ந்த இடங்கள் வெள்ளை நிறத்தில் கட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தோட்டா தடயங்கள் மூன்று வெவ்வேறு சுவர்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஜாலியன் வாலாபாக் நிகழ்வில் கொடூரமாக கொல்லப்பட்ட அப்பாவிகளின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் பூங்காவின் நடுவே கட்டப்பட்டுள்ள ஜாலியன் வாலாபாக் நினைவுச்சின்னம் சுடர் வடிவத்தில் உயரமாக வடிவமைக்கப்ட்டுள்ளது. இந்த நினைவு சின்னம் 1961 இல் அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன .

இந்த வரலாற்று நினைவு சதுக்கத்தில் ஒரு பகுதியில் மாவீரன் உதம் சிங்கிற்க்காக மட்டும் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் பிரமாண்டமான புகைப்படம் , சிற்பம் , அவரின் அஸ்தி மற்றும் மேலும் பல சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களும் பார்வையாளர்களுக்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது .
உதம் சிங் யார் என்று கேட்பவர்களுக்கு , இந்த படுகொலை நடக்க மூலகாரணமாக இருந்த அப்போதைய பஞ்சாப் துணைநிலை ஆளுநர் மைக்கேல் ஓ’ட்வயரை படுகொலை செய்தவர்தான் இவர் என்று வரலாற்று குறிப்புகளை மேற்கோள் காட்டுகிறார்கள்.
உதம் சிங் அரங்கிற்கு அருகிலேயே , 24 மணி நேரமும் எரியும் அணையா சுடரும் , இன்னொரு புறம் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்தைக் குறிக்க முற்றமும் ஒரு பிரமிடும் உள்ளது.

மாலை வேளைகளில் நடிகர் அமிதாப்பச்சன் குரலில் , உதம் சிங்கின் பார்வையில் விவரிக்கப்படும் ஒரு மணி நேர தகவல் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி நடைபெறுவதாக சொன்னார்கள். நாங்கள் மதியம் நேரத்தில் சென்றதால் எங்களால் அந்த அரிய நிகழ்வை காண முடியவில்லை.
வரலாற்று பாடம் நடத்தினோம் என்று ஆசிரியர்களும் படித்தோம் என்று மாணவர்களும், மறந்து போகாமல் அவசியம் ஜாலியன் வாலா பாக் ஒரு முறையாவது நேரில் காண வேண்டும்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.