
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் வரும் 27-ம் தேதி போராட்டம் நடத்த பொதுநல அமைப்புகள் முடிவு எடுத்துள்ளன.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி, கடந்த வாரம் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியது. காரைக்கால் மாவட்ட மக்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது.