
சென்னை: பள்ளிகரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்தவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரவீன். இவர் மாற்றுச் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதனால் பிரவீன் அப்பெண்ணின் சகோதரரால் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கணவரை இழந்த ஷர்மிளா, இரண்டு மாதங்கள் கழித்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.